சாமியாகாத
மீந்த மண்ணில்
விரும்பிச்செய்தான்
யானையொன்றை.
பொம்மை யானை வளர்ந்தது
யானை உயரத்துக்கு
ஊரேகூடி
செய்நேர்த்தியில் அதிசயித்து
ஓயாது புகழ்ந்தது
கலை உச்சத்தின்
கனம் தாங்காமல்
நிஜம் என்றே அதிசயித்தமக்கள்
கலைந்து சென்ற இரவில்
தனித்திருந்தவனிடம்
யானை தன் தும்பிக்கை நீட்டி
உணவு கேட்கத் தொடங்கியது.
மீந்த மண்ணில்
விரும்பிச்செய்தான்
யானையொன்றை.
பொம்மை யானை வளர்ந்தது
யானை உயரத்துக்கு
ஊரேகூடி
செய்நேர்த்தியில் அதிசயித்து
ஓயாது புகழ்ந்தது
கலை உச்சத்தின்
கனம் தாங்காமல்
நிஜம் என்றே அதிசயித்தமக்கள்
கலைந்து சென்ற இரவில்
தனித்திருந்தவனிடம்
யானை தன் தும்பிக்கை நீட்டி
உணவு கேட்கத் தொடங்கியது.